< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்தவர் சாவு
கரூர்
மாநில செய்திகள்

விஷம் குடித்தவர் சாவு

தினத்தந்தி
|
16 Aug 2023 6:35 PM GMT

விஷம் குடித்தவர் பரிதாபமாக இறந்தார்.

லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). இவர் கடந்த சில நாட்களாக முதுகு வலியால் அவதி அடைந்து வந்தார். இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட கார்த்திக் நேற்று பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Tags :
மேலும் செய்திகள்