< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மது போதையில் கீழே விழுந்தவர் சாவு
|23 July 2023 6:36 PM GMT
மது போதையில் கீழே விழுந்தவர் இறந்தார்.
பொன்னமராவதி சிவப்பிரகாசம் நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 55). இவருக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மது அருந்திவிட்டு நேற்று இரவு பொன்னமராவதி பஸ் நிலையம் எதிரே மெக்கானிக் கடை அருகே அமர்ந்திருந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.