< Back
மாநில செய்திகள்
பெரம்பலூரில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்ட நிகழ்ச்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூரில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்ட நிகழ்ச்சி

தினத்தந்தி
|
2 July 2023 6:30 PM GMT

பெரம்பலூரில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை பொதுமக்கள் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பெரம்பலூர் நகரில் மாவட்ட போலீசார் சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் (மகிழ்ச்சி ஞாயிறு) என்ற நிகழ்ச்சி ஏற்கனவே 2 வாரம் கொண்டாடப்பட்டது. 3-வது வாரமாக நேற்று பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்ட நிகழ்ச்சி மாலையில் நடத்தப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் போலீசார், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும், அவர்களுக்கு பாடலுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் சிறுவர், இளைஞர்களின் தப்பாட்டம், பள்ளி மாணவ-மாணவிகளின் சிலம்பாட்டம், வில்வித்தை, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், போதை பழக்க வழக்கங்களில் அடிமையாவதை தவிர்க்குமாறும், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும், போக்குவரத்து விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்