< Back
மாநில செய்திகள்
இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள் - ஓ.பன்னீர்செல்வம்
மாநில செய்திகள்

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள் - ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
28 Jun 2023 12:09 PM GMT

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்,

தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைத் தூதரின் தியாகங்களை நினைத்துப் பார்த்து அவருடைய வழியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதுதான் பக்ரீத் திருநாள்.

இறைத் தூதரின் தியாகங்களை நினைவுகூருவதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கும், நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் தடைக் கற்களாக விளங்குகின்ற ஆணவம், அநீதி, துரோகம், சூழ்ச்சி ஆகியவை ஒழிந்து நல்ல எண்ணங்களும், மனித நேயமும் தழைத்தோங்கும்.

தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் சாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட உறுதி பூணுவோம்.

இறை நம்பிக்கையும், மனித நேயமும் பரவட்டும்; அமைதி நிலவட்டும், ஆனந்தம் பெருகட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய "பக்ரீத்" திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்