< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
21 Aug 2023 6:45 PM GMT

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தக்கலை:

தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் லீலா(வயது55). இவருடைய மகன் பிரதீப்குமார் (24). இவர் பனைமரம் ஏறும் தொழில் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும், மதுகுடிக்கும் பழக்கமும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பிரதீப்குமார் சரியாக வேலைக் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள கோவில் வளாகத்தில் தூங்கச் சென்றுள்ளார். நேற்று காலையில் வேலைக்கு அனுப்புவதற்காக மகனை எழுப்புவதற்கு லீலா அந்த கோவிலுக் சென்றார். அங்கு பிரதீப்குமாரை காணவில்லை. இதனால், லீலா அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி மரத்தில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த லீலா பொதுமக்கள் உதவியுடன் பிரதீப்குமாாின் உடலை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே பிரதீப்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரதீப்குமாரின் தாயார் லீலா கொடுத்த புகாரின்பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்