< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
2 March 2023 5:13 PM GMT

திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவி ஜெயந்தி உள்ளிட்ட நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் வருகை அறிவிப்பு நிறுத்தப்பட்டதை கண்டித்தும், ரெயில் வருகை தொடர்பாக மீண்டும் அறிவிப்பு செய்யக்கோரியும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்