< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
24 Dec 2022 4:31 PM GMT

வடமதுரை போலீசாரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், வடமதுரையில் 3 சாலைகள் சந்திப்பு பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் குழந்தைவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாவட்ட செயலாளர் பகத்சிங் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சட்டம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதுடன், மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்யும் வடமதுரை போலீசாருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்