< Back
மாநில செய்திகள்
அரையாண்டு விடுமுறை முடிந்தது... அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

அரையாண்டு விடுமுறை முடிந்தது... அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறப்பு

தினத்தந்தி
|
2 Jan 2023 12:48 AM GMT

6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

சென்னை,

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த 15-ம் தேதி தொடங்கியது.

23-ம் தேதியுடன் அரையாண்டுத் தேர்வு நிறைவு பெற்றது. அரையாண்டு தேர்வு முடிந்து டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்