< Back
மாநில செய்திகள்
குரூப் 2 தேர்வு சான்றிதழ் பதிவேற்ற இ-சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் - தமிழக அரசு அறிவிப்பு
மாநில செய்திகள்

குரூப் 2 தேர்வு சான்றிதழ் பதிவேற்ற இ-சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் - தமிழக அரசு அறிவிப்பு

தினத்தந்தி
|
2 Dec 2022 11:00 PM IST

குரூப் 2 தேர்வு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இ-சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2 & 2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை 16ம் தேதி வரை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில்கொண்டு, அனைத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன இ-சேவை மையங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேவைப்படும் இ-சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, விண்ணப்பதாரர்கள் இதனை பயன்படுத்தி தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான உதவிக்கு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 425 2911 –ஐ தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்