< Back
மாநில செய்திகள்
நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில்ரூ.38 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில்ரூ.38 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்

தினத்தந்தி
|
25 Sep 2023 7:00 PM GMT

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 541 மனுக்களை பொதுமக்கள் கலெக்ட ரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து, தாட்கோ மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.29.72 லட்சம் மதிப்பில் கடன்உதவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.6 ஆயிரம் வீதம் 2 பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டி, கூட்டுறவுத் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2.27 லட்சம் மதிப்பில் வட்டியில்லா பயிர் கடனுதவி, ஒரு மகளிர் சுய உதவிக்குழுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் கடன்உதவி மற்றும் வருவாய் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆணை என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.38.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்