< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 452 மனுக்கள் குவிந்தனபயனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
நாமக்கல்
மாநில செய்திகள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 452 மனுக்கள் குவிந்தனபயனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

தினத்தந்தி
|
17 July 2023 7:00 PM GMT

நாமக்கல்லில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 452 மனுக்கள் குவிந்தன. 9 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மொத்தம் 452 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.6 ஆயிரம் வீதம் 3 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரமும், கடந்த 10-ந் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சலவை பெட்டி கோரி மனு அளித்த ஒரு பயனாளிக்கு தாட்கோ சார்பில் ரூ.3,500 மதிப்பில் சலவை பெட்டியும், ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் ஒரு பயனாளிக்கு நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் உதவியும் கலெக்டர் வழங்கினார்.

மேலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2 பயனாளிகளுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் கலெக்டர் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவியும் வழங்கப்பட்டது. பின்னர் கலெக்டர் தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மொத்தமாக இந்த கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ராமசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்