< Back
மாநில செய்திகள்
உணவு பொருள் வழங்கல் குறித்த குறைதீர் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

உணவு பொருள் வழங்கல் குறித்த குறைதீர் கூட்டம்

தினத்தந்தி
|
6 July 2023 6:31 PM GMT

அரியலூர் மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் குறித்த குறைதீர் கூட்டம் 4 கிராமங்களில் நடக்கிறது.

அரியலூர் மாவட்டத்தில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் விவரங்கள் வருமாறு:-

அரியலூர் தாலுகாவிற்கு சென்னிவனம் கிராமத்திலும், உடையார்பாளையம் தாலுகாவில் தென்கச்சிப்பெருமாள்நத்தத்திலும், செந்துறை தாலுகாவில் நமங்குணத்திலும், ஆண்டிமடம் தாலுகாவில் காட்டாத்தூரிலும் (தெற்கு) ஆகிய 4 கிராமங்களில் மேற்கண்ட முகாம் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம், என கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்