< Back
மாநில செய்திகள்
அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தினத்தந்தி
|
24 May 2023 6:38 PM GMT

விவசாயிகள் குறைதீர் கூட்டம் அரியலூரில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருட்கள், வேளாண் எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

மேலும் செய்திகள்