< Back
மாநில செய்திகள்
குறைதீர்க்கும் கூட்டத்தில்14 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை
நாமக்கல்
மாநில செய்திகள்

குறைதீர்க்கும் கூட்டத்தில்14 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை

தினத்தந்தி
|
15 May 2023 6:45 PM GMT

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.

இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 274 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இலவச வீட்டுமனை பட்டா

அதனைத்தொடர்ந்து, ராசிபுரம் தாலுகா ஆர்.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 14 பயனாளிகளுக்கு தலா ரூ.78 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் அவர் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று, துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், உதவி ஆணையர் (கலால்) செல்வி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்