< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
21 Nov 2022 6:45 PM GMT

நாமக்கல்லில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 312 மனுக்கள் பெறப்பட்டன.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 312 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். பின்னர் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் பெற்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) தேவிகாராணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்