< Back
தமிழக செய்திகள்
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மயிலாடுதுறை
தமிழக செய்திகள்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
20 Jun 2023 12:15 AM IST

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் 179 மனுக்கள் பெறப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர். இந்த இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி, புகார் தொடர்பான மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள், அடிப்படை வசதி வேண்டி என மொத்தம் 179 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், தனித்துணை கலெக்டர் சமூகபாதுகாப்புத் திட்டம் கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்