< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சம்
|20 Jun 2023 6:45 PM GMT
கருங்கல் போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சம்
கருங்கல்,
கருங்கல் அருகே உள்ள மத்திக்கோடு அம்பலத்துவிளையை சேர்ந்தவர் ஜார்ஜ். இவருைடய மகள் பிரின்சி (வயது 23), பி.எஸ்சி., பி.எட். பட்டதாரி. இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த குமரேசன் மகன் அருள்ராஜ் (25) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அருள்ராஜ் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கருங்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் இசக்கி துரை இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேசி காதல் ஜோடியை சேர்த்து வைத்து அனுப்பினர்.