< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

புதுக்கோட்டைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்

தினத்தந்தி
|
29 Sep 2023 8:22 PM GMT

பட்டுக்கோட்டையில் இருந்து கருக்காகுறிச்சி, வெட்டன் விடுதி வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சிற்றம்பலம்:

பட்டுக்கோட்டையில் இருந்து கருக்காகுறிச்சி, வெட்டன் விடுதி வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராம மக்கள் கோரிக்கை

கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு கிராம மக்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி கடைவீதி, செருவாவிடுதி வடபாதி, ஈச்சன்விடுதி, புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி, வெட்டன் விடுதி வழியாக புதுக்கோட்டை வரை அரசு பஸ் இயக்க வேண்டும். மேற்படி கிராம பகுதிகள் அனைத்தும் விவசாயம் சார்ந்த பகுதிகளாக உள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்கள் முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு ஆவணம் கைகாட்டி, திருச்சிற்றம்பலம், ஆலங்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு வந்து தான் பிற முக்கிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அரசு பஸ் இயக்க வேண்டும்

இதனால், தேவையற்ற கால விரயமும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. எனவே இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையினை ஏற்று பட்டுக்கோட்டையில் இருந்து கருக்காகுறிச்சி, வெட்டன்விடுதி வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பஸ்சை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்