< Back
மாநில செய்திகள்
அரசு பெண் ஊழியர் மாயம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

அரசு பெண் ஊழியர் மாயம்

தினத்தந்தி
|
24 Sep 2023 6:45 PM GMT

அரசு பெண் ஊழியர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண், பி.இ. படித்துவிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவரை பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அப்பெண்ணின் தாய், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அரசு பெண் ஊழியரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்