< Back
மாநில செய்திகள்
அரசு ஊழியர் சந்திப்பு பிரசார கூட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

அரசு ஊழியர் சந்திப்பு பிரசார கூட்டம்

தினத்தந்தி
|
14 July 2022 6:45 PM GMT

அரசு ஊழியர் சந்திப்பு பிரசார கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர் சந்திப்பு பிரசார கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட நிர்வாகிகள் புகழேந்தி, ஜெயவேல், குமரன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலசெயலாளர் மகேஸ்வரி, தமிழ்நாடு நூலகத்துறை அலுவலர் சங்க மாநிலதலைவர்‌ பிரபாகரன், வேளாண்மைததுறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ரேகா, சுகாதார ஆய்வாளர் நலச்சங்க மாவட்ட நிர்வாகிகள் யாரப்பாஷா, சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்