< Back
மாநில செய்திகள்
சத்துணவு பெண் அமைப்பாளரிடம் தங்க சங்கிலி பறிப்பு
திருச்சி
மாநில செய்திகள்

சத்துணவு பெண் அமைப்பாளரிடம் தங்க சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
27 Oct 2022 8:57 PM GMT

சத்துணவு பெண் அமைப்பாளரிடம் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

மணப்பாறை:

மணப்பாறை பாரதியார் நகரை சேர்ந்தவர் ராணி (வயது 50). சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். நேற்று வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் வந்த மர்மநபர்கள் 2 பேர் ராணியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது அவர் சங்கிலியை இருக்க பிடித்துக் கொள்ளவே பாதி சங்கிலியை அறுத்து கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மர்மநபர்களை பிடிக்க விரட்டி சென்றனர். இருப்பினும் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். இதுகுறித்து மணப்பாறை போலீசார் சத்துணவு அமைப்பாளரிடம் தங்க சங்கிலியை பறித்து சென்று மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்