< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி அருகே    10 ஆடுகள் திருட்டு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே 10 ஆடுகள் திருட்டு

தினத்தந்தி
|
14 Oct 2022 6:45 PM GMT

கள்ளக்குறிச்சி அருகே 10 ஆடுகள் திருடு போனது.


தியாகதுருகம் அருகே சித்தலூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 36). இவர் சொந்தமாக வளர்த்துவரும் ஆடுகளை வீட்டுக்குவெளியே கட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டில் தூங்கினர். அப்போது அவர்களது வீட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, அங்கிருந்த 8 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

அதிகாலை 3 மணிக்கு செந்தில் குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது, கதவை திறக்கமுடியவில்லை. அருகில் வசிப்பவர்கள் திறந்த விட்ட பின்னரே அவர்கள் வெளியே வந்தனர். இதேபோன்று செந்திலின் வீட்டுக்கு அருகே வசித்தவர் வீட்டில் இருந்தும் 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்