< Back
மாநில செய்திகள்
சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
3 Sep 2022 5:18 PM GMT

உத்தனப்பள்ளி அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராயக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அஞ்சலகிரி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் ஜெயப்பிரியா (வயது 17). நேற்று சிறுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றாள். இதையறிந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதுதொடர்பான புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்