< Back
மாநில செய்திகள்
கடையம் அருகே பெண் மர்ம சாவு
தென்காசி
மாநில செய்திகள்

கடையம் அருகே பெண் மர்ம சாவு

தினத்தந்தி
|
23 Jun 2023 6:45 PM GMT

கடையம் அருகே பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்

கடையம்:

கடையம் அருகே மேட்டூர் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் ரூபன். இவர் ஆழ்வார்குறிச்சியில் செங்கல்சூளை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிலோமினாள் (வயது 38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2 பிள்ளைகளும் நேற்று முன்தினம் ஆழ்வார்துலுக்கபட்டியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றனர். எனவே ரூபன், பிலோமினாள் ஆகிய 2 பேரும் இரவில் வீட்டில் தனியாக தூங்கினர்.

இந்த நிலையில் நேற்று காலையில் பிலோமினாள் படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரூபன் இதுகுறித்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த பிலோமினாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே பிலோமினாள் எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்