< Back
மாநில செய்திகள்
பெண் மர்ம சாவு
திருச்சி
மாநில செய்திகள்

பெண் மர்ம சாவு

தினத்தந்தி
|
29 Sep 2023 7:32 PM GMT

பெண் மர்மமான முறையில் இறந்தார்.

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த என்.பெருமாம்பட்டியை சேர்ந்தவர் அஞ்சலை(வயது 27). இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் கீழே இறக்கி வைக்கப்பட்டிருந்தது. இது பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஞ்சலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்