திருப்பத்தூர்
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 33). இவர் அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பவஸ்ரீ (30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பவஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பவஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆனதால் பவஸ்ரீ சாவு குறித்து கோட்டாட்சியர் பிரேமலதா ேமல் விசாரணை நடத்தி வருகிறார்.