< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு பரிசளிப்பு
தென்காசி
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு பரிசளிப்பு

தினத்தந்தி
|
19 Sep 2022 6:45 PM GMT

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் காமராஜர் திருமண மண்டபத்தில் யோகீஸ்வரர் சமுதாய பேரவை சார்பில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாநில தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி தலைவர் ராஜமுருகன், மாநில நிர்வாக செயலாளர் சுப்பிரமணியன், வாசுதேவநல்லூர் கிளை தலைவர் வி.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநில பொதுச்செயலாளர் செல்வகேசவன் வரவேற்று பேசினார்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் யோகீஸ்வரர் சமுதாயத்தில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மாநில பொருளாளர் மாரிமுத்து, மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ், பொருளாளர் ராமகிருஷ்ணன், கிளை நிர்வாகி இசக்கி, சிவகுல கூட்டமைப்பு தலைவர் சேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சடையப்பன் என்ற செல்வம் நன்றி கூறினார்.


மேலும் செய்திகள்