< Back
மாநில செய்திகள்
பொதுக்குழு வழக்கு.. ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் நாளை ஓபிஎஸ் மேல்முறையீடு
மாநில செய்திகள்

பொதுக்குழு வழக்கு.. ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் நாளை ஓபிஎஸ் மேல்முறையீடு

தினத்தந்தி
|
4 Sep 2022 8:28 AM GMT

பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாளை ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று முன் தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம்கோர்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகாமல் பொதுக்குழுவை கூட்டியது எப்படி செல்லும் என்று நீதிமன்றத்தில் முறையிடவும் ஒ.பன்னீர் செல்வம் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்