< Back
தமிழக செய்திகள்

காஞ்சிபுரம்
தமிழக செய்திகள்
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

11 July 2023 4:38 PM IST
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வண்டலூர்- வாலாஜாபாத் நெடுஞ்சாலையோரம் கரசங்கால், படப்பை, சாலமங்கலம், செரப்பணஞ்சேரி, வைப்பூர், வட்டம்பாக்கம் ஆகிய பகுதிகளில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. 6 வழி சாலை ஒரத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சாலை ஒரங்களில் துர் நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் தேங்கி கிடக்கும்
பிளாஸ்டிக் குப்பை கழிவுகளினால் மர்ம காய்ச்சல் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே வண்டலூர்- வாலாஜாபாத் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றவும், சாலை ஓரங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.