< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்றவர் 74 நாட்கள் சிறையில் அடைப்பு
திருச்சி
மாநில செய்திகள்

கஞ்சா விற்றவர் 74 நாட்கள் சிறையில் அடைப்பு

தினத்தந்தி
|
5 Aug 2022 7:48 PM GMT

கஞ்சா விற்றவர் 74 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி பெரியமிளகுபாறை பிரிவுரோட்டில் கஞ்சா விற்றதாக முத்துராமன் (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதை தடுக்க போதைப்பொருள் குற்றத்தடுப்புபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி முத்துராமனை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தினர். இதில் ஒருவருட காலத்துக்கு பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன், கஞ்சா விற்பனையில் ஈடுபட மாட்டேன் என அவர் நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். ஆனால் அவர் நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மீறி கஞ்சா விற்று வந்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு மீண்டும் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் குற்ற செயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 74 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, முத்துராமன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்