< Back
மாநில செய்திகள்
கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
14 Oct 2023 7:25 PM GMT

நெல்லை அருகே கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தேவர்குளம் போலீஸ் நிலைய பகுதியில் அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மதவகுறிச்சியை சேர்ந்த ராமர் (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று ராமரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் நேற்று மதுரை சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்