< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரியில்  சிசிடிவி கேமராக்கள் பொருத்தாத இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க  அனுமதி வழங்கப்படாது - மாவட்ட கலெக்டர்
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாத இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படாது - மாவட்ட கலெக்டர்

தினத்தந்தி
|
14 Sep 2023 2:22 PM GMT

கிருஷ்ணகிரியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாத இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படாது என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றா கும். விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

இந்த நிலையில் , கிருஷ்ணகிரியில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார்.

சிசிடிவி கேமராக்கள் பொருத்தாத இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படாது . விநாயகர் சிலையுடன் 24 மணி நேரமும் 2 பேர் இருக்க வேண்டும் என விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகளை வைக்கும் அமைப்பினருக்கு மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்