< Back
மாநில செய்திகள்
ஆரணியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

ஆரணியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தினத்தந்தி
|
4 Sep 2022 2:55 PM GMT

ஆரணியில் பல்வே இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து்சசெல்லப்பட்டு பாறைகுளத்தில் கரைக்கப்பட்டது.

ஆரணி

ஆரணியில் பல்வே இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து்சசெல்லப்பட்டு பாறைகுளத்தில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 31-ந் தேதி ஆரணியின் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன. கடந்த 5 நாட்களாக பூஜைகள் நடத்தி நேற்று விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அதன்படி நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஆரணி அண்ணாசிலை பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து அந்த சிலைகள் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

தெய்வங்களின் வேடம்

சிந்தனை அமைப்பின் மாநில நிர்வாகி ராஜேந்திரன் கலந்துகொண்டு விநாயகர் பெருமைகளையும், இந்துக்களின் பெருமைகளையும் விவரித்து பேசினார். அதனைத் தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளான காந்தி ரோடு, வடக்கு மாட வீதி, பெரிய கடை வீதி, சத்தியமூர்த்தி சாலை, ராமகிருஷ்ண பேட்டை வழியாக பையூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் உள்ள பாறை குளத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டன.

ஊர்வலத்தில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நகர, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், பா.ஜ.க. நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பொறுப்பாளர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி இந்துக்கள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது பலர் தெய்வங்களின் உருவங்களை வேடமிட்டும் ஊர்வலமாக சென்றனர், மேலும் சிவகன வாத்தியங்கள், நாதஸ்வரம், தாரை தப்பட்டை, வாண வேடிக்களுடன் ஊர்வலம் சென்றது.

பாதுகாப்பு

ஊர்வலத்திற்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு சென்றார். ஊர்வலத்திற்காக கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சௌந்தரராஜன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிச்சந்திரன், வெங்கடேசன் மற்றும் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 18 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 340 போலீசார் ஆயுதப்படையுடன் குவிக்கப்பட்டிருந்தனர்.

விநாயகர் சிலைகள் கரைக்கும் பாைறகுளத்தில் 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பாறைகுளத்தை ஊர்வலம் சென்றடைந்ததும் அங்கு ஒவ்வொரு சிலையாக கரைக்கப்பட்டத.

ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்திலும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் பெரிய ஏரியில் கரைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்