< Back
மாநில செய்திகள்
காந்தி பிறந்த நாள் விழா
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

காந்தி பிறந்த நாள் விழா

தினத்தந்தி
|
2 Oct 2022 6:48 PM GMT

திருவண்ணாமலையில் நடந்த காந்தி பிறந்த நாள் விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக அவர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற காந்தியின் பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மு.பெ.கிரி எம்.எல்.ஏ., திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, திருவண்ணாமலை கதர் கிராம தொழில் வாரியத்தின் கண்காணிப்பாளர் நரேஷ்குமார், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திக்வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்