< Back
மாநில செய்திகள்
நாளை கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு காப்புகட்டி விரதமிருக்க பக்தர்களுக்கு அனுமதி - இடம்பிடிப்பதில் போட்டா போட்டி
மதுரை
மாநில செய்திகள்

நாளை கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு காப்புகட்டி விரதமிருக்க பக்தர்களுக்கு அனுமதி - இடம்பிடிப்பதில் போட்டா போட்டி

தினத்தந்தி
|
23 Oct 2022 5:45 PM GMT

திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை 25-ந்தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் காப்புகட்டி கோவிலில் தங்கி இருந்து கடும்விரதம் இருக்க உள்ளனர். இடம்பிடிப்பதில் பக்தர்களிடையே போட்டா, போட்டி நிலவியது.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை 25-ந்தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் காப்புகட்டி கோவிலில் தங்கி இருந்து கடும்விரதம் இருக்க உள்ளனர். இடம்பிடிப்பதில் பக்தர்களிடையே போட்டா, போட்டி நிலவியது.

2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புகட்டி கோவிலில் 7 நாட்கள் தங்கி இருந்து விரதமிருப்பது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால்கோவிலுக்குள் காப்புகட்டி விரதமிருக்க பக்தர்களுக்கு அனுமதி தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான கந்தசஷ்டி திருவிழா நாளை (25-ந்தேதி) காலை 7 மணி அளவில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. வருகிற 29-ந்தேதி வேல்வாங்குதல், 30-ந்தேதி சூரசம்ஹார லீலை, 31-ந்தேதி சட்டத் தேர் கிரிவலம் நடக்கிறது.

போட்டோ, போட்டி

இதனையொட்டிகடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம்போல கந்தசஷ்டி திருவிழாவில் காப்புகட்டி கோவிலிலேயே 7 நாட்கள் தங்கி இருந்து கடும் விரதமிருக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி விரதமிருக்ககூடிய பக்தர்களில் பெரும்பாலனோர் நேற்று காலையிலேயே கோவிலுக்குள் தங்கக்கூடிய இடத்தின் தரையில் வட்டமிட்டு தங்களது பெயர் மற்றும் ஊர் பெயரை எழுதி போட்டுக்கொண்டு இடம் பிடித்தனர்.

மேலும் செய்திகள்