< Back
மாநில செய்திகள்
கோபி நகராட்சியில் இருந்து 14 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைப்பு
ஈரோடு
மாநில செய்திகள்

கோபி நகராட்சியில் இருந்து 14 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைப்பு

தினத்தந்தி
|
24 May 2023 9:11 PM GMT

கோபி நகராட்சியில் இருந்து 14 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடத்தூர்

கோபி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இதில் 12 டன் மக்கும் கழிவுகள் எந்திரத்தில் அரைக்கப்பட்டு தொட்டிகளில் நிரப்பப்பட்டு 40 நாட்கள் மக்கிய பிறகு அவற்றை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்டுகிறது. மக்காத கழிவுகளான பிளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றில் மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பொருட்கள் மாற்று எரிபொருளுக்காக சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதன்படி 14 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 173 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்