< Back
மாநில செய்திகள்
விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
திருவாரூர்
மாநில செய்திகள்

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

தினத்தந்தி
|
6 Sep 2022 5:59 PM GMT

எண்ணக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.


குடவாசல் ஒன்றியத்தில் உள்ள எண்ணக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பெற்றோர் -ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.. குடவாசல் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஜோதிராமன் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மணவை சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்கள். விழாவில் ஊராட்சி செயலாளர் சீவல் சுரேஷ், வார்டு உறுப்பினர் சரவணன் பெற்றோர்- ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெற்றோர்- ஆசிரியர் கழக பொருளாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்