< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்-பெரம்பலூரில் 8-ந்தேதி தொடக்கம்
|2 Oct 2022 8:05 PM GMT
மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூரில் 8-ந்தேதி தொடங்குகிறது.
பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை 20 ஆயிரம் பணியிடங்களுக்கு வருகிற 8-ந்தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. எனவே மேற்கண்ட இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வருகிற 6-ந்தேதி காலை 11 மணிக்குள் நேரில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.