< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
திருவாரூர்
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
18 Sep 2022 6:45 PM GMT

அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கொரடாச்சேரி:

கொரடாச்சேரியை அடுத்த அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அருளாளன் வரவேற்றார். இதில் பூண்டி. கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில்10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 1½ பவுன் செயின் வழங்க உள்ளதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சேகர், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலச்சந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர் முருகதாஸ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு பொது தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜான்அருள் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்