< Back
மாநில செய்திகள்
கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.7 லட்சம் மோசடி; தம்பதி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு
திருச்சி
மாநில செய்திகள்

கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.7 லட்சம் மோசடி; தம்பதி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
7 Dec 2022 8:12 PM GMT

கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி-புதுக்கோட்டை மெயின்ரோடு பகுதியில் வசித்து வருபவர் சபீர் (வயது 52), கட்டிட ஒப்பந்ததாரர். மேலும், இவர் அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில், செந்தில்குமார், இவரது மனைவி அனிதா, சதீஷ் ஆகியோர் சபீரின் கட்டுமான அலுவலகத்துக்கு சென்று தங்களுக்கு வீடு கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். பின்னர் வீடுகட்டுவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து வீட்டின் கட்டிட பணிகள் நிறைவடைந்து சபீர் வீட்டை ஒப்படைத்து விட்டார். ஆனால் சபீருக்கு தரவேண்டிய ரூ.7 லட்சத்தை அவர்கள் தராமல் ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து, திருச்சி கோர்ட்டில் சபீர் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி உத்தரவின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் செய்திகள்