< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் ரூ.20 லட்சம் மோசடி
சேலம்
மாநில செய்திகள்

பெண்ணிடம் ரூ.20 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
3 Oct 2022 8:00 PM GMT

பெண்ணிடம் ரூ.20 லட்சம் மோசடி தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னதானப்பட்டி:-

சேலம் தாதகாப்பட்டி சண்முகநகர் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவருடைய மனைவி இந்துமதி (வயது 25). இவர், சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அசோகனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

ஏற்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூஸ் ஸ்காட், ஜோசப் ஸ்காட், பிரான்சிஸ் ஜேம்ஸ்காட், மைக்கேல் எரால்ட், ஜான் வால்டர் ஸ்காட், பீட்டர் ஜேம்ஸ் ஸ்காட், ஐரீன் கிறிஸ்டோபர் மற்றும் வெங்கடாஜலம் ஆகிய 8 பேர் கடந்த 2019-ம் ஆண்டு என்னிடம், பத்திரம் எழுதி கொடுத்து ரூ.20 லட்சம் பெற்றனர். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்கள். மேலும் பணம் குறித்து கேட்டால் மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உதவி கமிஷனர் அசோகன் அன்னதானப்பட்டி போலீசுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவர்கள் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரூ.20 லட்சம் மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்