< Back
மாநில செய்திகள்
தனியார் நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் பணம் மோசடி
விழுப்புரம்
மாநில செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் பணம் மோசடி

தினத்தந்தி
|
28 Feb 2023 6:45 PM GMT

வானூர் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா மணவேலி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). இவர் ஆரோவில்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய முகநூலுக்கு கலூஸ் டேவிட் என்ற முகநூல் முகவரியில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நண்பர் போன்று பழகினார். அப்போது அந்த நபர், சதீஷ்குமாரிடம் உங்களுக்கு பரிசுப்பொருளை பார்சலில் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். பின்னர் ஒருவர், சதீஷ்குமாரை தொடர்புகொண்டு, தான் டெல்லியில் உள்ள சுங்கவரி அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, உங்களுக்கு வந்துள்ள பார்சலை பெற ஏர்போர்ட் கிளீனிங் சார்ஜாக ரூ.35 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றார். இதை உண்மையென நம்பிய சதீஷ்குமார், அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.35 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை பெற்ற மர்ம நபர், சதீஷ்குமாருக்கு எந்தவொரு பரிசுப்பொருள் அடங்கிய பார்சலும் அனுப்பாமல் பணத்தை ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து சதீஷ்குமார், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்