< Back
மாநில செய்திகள்
போலி நகை கொடுத்து புதிய நகைகள் வாங்கி மோசடி; மனைவிக்கு உதவிய கணவன் கைது
சென்னை
மாநில செய்திகள்

போலி நகை கொடுத்து புதிய நகைகள் வாங்கி மோசடி; மனைவிக்கு உதவிய கணவன் கைது

தினத்தந்தி
|
20 Aug 2022 6:22 PM GMT

மயிலாப்பூரில் போலி நகை கொடுத்து புதிய நகைகள் வாங்கி சென்ற கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் உள்ள ஒரு ஜூவல்லரியில் கடந்த 18-ந்தேதி அன்று 68 கிராம் பழைய நகைகளை கொடுத்து 6 சவரன் நகைகளை பெண் ஒருவர் வாங்கி சென்றார்.

அவர் சென்ற பின்னர் கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரன், அந்த நகையை சோதனை செய்த போது, அவை போலி என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர், மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கடை மற்றும் வெளியே இருந்த சி.சி.டி.வி.கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிய பெண், ஆண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

அந்த வாகன எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போலி நகை கொடுத்து மோசடியில் ஈடுபட்டது குன்றத்தூர் லட்சுமி நகரை சேர்ந்த ஈஸ்வரி(36) என்பதும், அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தது அவரது கணவர் மோகன்குமார்(46) என்பதும் தெரிய வந்தது.

இந்த வழக்கில் மோகன்குமார் கைது செய்யப்பட்டார். இவர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஈஸ்வரி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்