< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நாமக்கல் கலெக்டர் அலுவலக ஊழியரிடம் ஆன்லைனில் ரூ.1 லட்சம் மோசடி
|24 May 2023 6:45 PM GMT
கோவை குனியமுத்தூர் கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது32). இவர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடியதாக கூறப்படுகிறது.
அப்போது வந்த லிங்க்கை கிளிக் செய்து உள்ளார். அதில் குறைந்த அளவு பணம் செலுத்தி, டாஸ்க் செய்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதை உண்மை என நம்பி மணிகண்டன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை செலுத்தி உள்ளார். ஆனால் பணம் எதுவும் திரும்ப கிடைக்கவில்லை. எனவே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணிகண்டன் இது குறித்து நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.