< Back
மாநில செய்திகள்
நகை கடை ஊழியரிடம்ஆன்லைனில் ரூ.8¼ லட்சம் மோசடி
நாமக்கல்
மாநில செய்திகள்

நகை கடை ஊழியரிடம்ஆன்லைனில் ரூ.8¼ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
10 May 2023 6:45 PM GMT

குமாரபாளையத்தில் நகை கடை ஊழியரிடம் ஆன்லைனில் ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகைகடை ஊழியர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் தேவநேசம் (வயது40). இவர் ஈரோட்டில் உள்ள நகைகடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஆன்லைனில் பகுதிநேர வேலையை தேடி உள்ளார்.

அப்போது இவருக்கு ஒரு லிங்க் கிடைத்து உள்ளது. அந்த லிங்கில் பல்வேறு டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு டாஸ்க்கையும், ஒரு குறிப்பிட்ட தொகையை ஆன்லைனில் செலுத்தி, வெற்றி பெற்றால் அதற்கு தகுந்தாற்போல் கூடுதல் பணம் கிடைக்கும் என தகவல் வந்து உள்ளது.

ரூ.8.23 லட்சம் மோசடி

அதை உண்மை என நம்பி 21 டாஸ்க் விளையாடிய அவர், ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் செலுத்தி உள்ளார். பின்னர் தனக்கு சேர வேண்டிய பணத்தை அனுப்புமாறு ஆன்லைனில் வேண்டுகோள் விடுத்து உள்ளார். ஆனால் எவ்வித பணமும் கிடைக்கவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

இது குறித்து தேவநேசம் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைகடை ஊழியரிடம் ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்