< Back
மாநில செய்திகள்
கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி
சிவகங்கை
மாநில செய்திகள்

கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
27 April 2023 6:45 PM GMT

கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சிங்கம்புணரி அழகப்பா நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மகள் இந்துமதி (வயது 25). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இணையதளம் வழியாக கடன் வாங்குவதற்காக முயற்சி செய்தார். அப்போது சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கடன் வாங்கி தருவதாக கூறி பல தவணைகளில் ரூ.2 லட்சம் வரை வாங்கினாராம். அதன்பின்னர் அவர் தொடர்பை துண்டித்து விட்டாராம். இதை தொடர்ந்து இந்துமதி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவகி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்