சிவகங்கை
பெண்ணிடம் ரூ.2½ லட்சம் மோசடி
|பெண்ணிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் பாரதிதாஸ். இவருடைய மனைவி கார்த்திகா (வயது 32). இவர் கடந்த மாதம் 30-ந் தேதி செல்போனில் ஒரு செயலியை பார்த்துள்ளார். அதில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து அவர் தன்னிடம் இருந்த ரூ. 2 லட்சத்து 57 ஆயிரத்து 416-ஐ பல தவணைகளில் அந்த செயலி மூலமாக செலுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த பணத்தை பெற்று கொண்ட பின்னர் அந்த நபர் இணைப்பை துண்டித்து விட்டார். அதன்பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கார்த்திகா அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம், கார்த்திகா புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.