< Back
மாநில செய்திகள்
டைல்ஸ் அனுப்புவதாக கூறி  பி.முட்லூர் தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி  பெங்களூருவை சேர்ந்தவர் கைது
கடலூர்
மாநில செய்திகள்

டைல்ஸ் அனுப்புவதாக கூறி பி.முட்லூர் தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி பெங்களூருவை சேர்ந்தவர் கைது

தினத்தந்தி
|
10 July 2022 4:47 PM GMT

டைல்ஸ் அனுப்புவதாக கூறி பி.முட்லூர் தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த பெங்களூருவை சேர்ந்தவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


பரங்கிப்பேட்டை அருகே பி.முட்லூரில் டைல்ஸ் மற்றும் சானிட்டரி கடை வைத்து நடத்தி வருபவர் பால கிருஷ்ணன் மகன் ராஜா (வயது 35). இவரது கடைக்கு அதிகப்படியான டைல்ஸ் தேவைப்பட்டதால், அவரும், அவரது மேலாளர் மீனாபாண்டியும் ஆன்லைன் மூலம் டைல்ஸ் கடையை தேடினர்.

அப்போது கர்நாடகா மாநிலம் பெங்களூரு பணசங்கரி 7-வது மெயின்ரோட்டில் வசிக்கும் வெங்கமராஜூ மகன் சுதர்சனராஜூ (44) என்பவர் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாக இருந்தது. இதை நம்பிய அவர்கள், சுதர்சனராஜூவை தொடர்பு கொண்டு அவருக்கு ஆன்லைன் மூலம் ரூ.5 லட்சத்தை அனுப்பி, டைல்ஸ் அனுப்புமாறு கூறினர்.

மோசடி

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட அவர், டைல்ஸ் அனுப்பவில்லை. அப்போது தான் அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். பின்னர் இது பற்றி ராஜா கடலூர் சைபர் கிரைம் போலீசில், தன்னுடைய ரூ.5 லட்சத்தை டைல்ஸ் அனுப்புவதாக கூறி, சுதர்சனராஜூ மோசடி செய்து விட்டதாக புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து அவரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், தேவேந்திரன் ஆகியோர் தலைமையில் சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜூ, ஏட்டுகள் மவுலீஸ்வரன், ஸ்டாலின், பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

கைது

இந்த தனிப்படை போலீசார், சுதர்சனராஜூவை தேடி பெங்களூரு விரைந்தனர். பின்னர் அங்கு மறைந்திருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து, கடலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் இருந்து 3 செல்போன்கள், 3 சிம்கார்டுகள், ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு, போலி நிறுவன ஆவணம் ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்