< Back
மாநில செய்திகள்
பணம் தர மறுத்ததால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
தேனி
மாநில செய்திகள்

பணம் தர மறுத்ததால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
17 March 2023 6:45 PM GMT

போடி அருகே பணம் தர மறுத்ததால் பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 54). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுந்தரம்மாள் (48). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சுந்தரம்மாள் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காளிமுத்து, சுந்தரம்மாளின் வீட்டிற்கு சென்று செலவுக்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து அங்கிருந்த அரிவாளை எடுத்து சுந்தரம்மாளை வெட்டினார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அக்கம்பக்கத்தினர் சுந்தரம்மாளை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அவர் போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை தேடி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்