< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவர்களுக்கானபேச்சுப்போட்டி  வருகிற 15-ந் தேதி நடக்கிறது
கரூர்
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கானபேச்சுப்போட்டி வருகிற 15-ந் தேதி நடக்கிறது

தினத்தந்தி
|
5 Sep 2023 6:28 PM GMT

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

அண்ணா பிறந்தநாள்

கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் 2023-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படும். இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும்- வழங்கப்பட உள்ளது.

கல்லூரி மாணவ-மாணவிகள்

கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் அண்ணாவும் மேடைபேச்சும், கடமை, கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பன உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.

கல்லூரி மாணவ-மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரி கல்வி இணை இயக்குனர் வழியாக இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டிடத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04324-255077-ஐ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்